All Episodes

November 17, 2025 10 mins

Do provide your feedback about our podcast for this year, it takes just 2 mins of your time. Details -> https://linktr.ee/kadhaineram

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு.

  1. Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. Do rate our podcast on Spotify/Apple Podcasts.
  2. Visit the ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠one stop page⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ for our podcast - ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠
  3. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well.
  4. Share a word about our podcast in your WhatsApp story.


Thank you very much!

__________

New stories from Monday to Friday.

Weekend special stories by Hosur Thaatha.

  • 🇮🇳 India Time (IST) - 6:00 PM
  • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM

__________

Suggestions welcome karutthukkalam@gmail.com

__________

Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast.

_______

Image Courtesy: Bhargav Kesavan Imagery

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:06):
பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி.
ராணியின் துயரம். இப்படி சிவன் அடியார்
படகிலிருந்து இறங்கினதும் அருள்மொழி தேவி அவர்
நமஸ்கரிச்சிட்டு நிமிர்ந்து பாத்தா அவளோட கண்கள்ல நீர்த்ததும்
மின் என்னது. சுவாமி விக்ரமன் எங்கே அப்படின்னு

(00:30):
சோகம் நிறைஞ்ச குரல்ல. அவ கதறி விம்மினம் போது
சிவநடியாருக்கு மெய்ஸில் எடுத்து போச்சு.
பொன்னணும் அவனோட முகத்தையே திருப்பிக்கிட்டா.
மரங்கள் மேல உக்காந்திருந்த பறவை இனங்களும் இந்த சோக குரல்ல கேக்க
சகிக்காதவை போல தங்களோட சிறகுகளை அடிச்சுக்கிட்டு பறந்து போச்சு.

(00:52):
சிவன் அடியாரோ. அருள்மொழி இது என்ன பைத்தியம்
உன்னோட பதி உனக்கு என்ன சொல்லிட்டு போனார் நீ வீர தாயாக
இருக்கணும்னு அவர் சொன்ன அந்த கடைசி வார்த்தைய மறந்துட்டியா?
இப்படியும் தைரியத்தை இழக்கலாமா வா அரண்மனைக்கு போய் சாவகாசமாக
பேசலாம் அப்படின்னாரு சிவன் அடியார்.

(01:12):
மாஞ்சோலைகளுக்கு நடுவுல அமைஞ்சிருந்த அழகான பாதை வழியாக
எல்லாரும் வசந்த மாளிகைக்கு போய் சேர்ந்தாங்க.
ஒரு காலத்துல எவ்வளவு குதூகலமும் கொண்டாட்டமுமாக இருந்த இந்த வசந்த
மாளிகை இப்போ பொலிவிழந்து சூனியமாக காணப்பட்டுச்சு.
அரண்மனை ஊழியர்களோட முகங்களும் கூட கலையின்றி சோகமாக இருந்தது.

(01:38):
மாளிகையோட முன் மண்டபத்துல புளி தோல் விரித்த ஓயரமான பீடத்துல
சிவநடியார் உக்காந்தாரு. அருள்மொழியோ கீழ வெறும் தரையில
உக்காந்தா. அம்மா உன் மனது நீ கலங்க விட
கூடாது அப்படின்னு சிவன் அடியார் ஆரம்பிச்ச போது அருள்மொழி அவரை
தடுத்து துக்கம் பொங்குற குரல்ல. அய்யோ மனச கலங்க விடக்கூடாதுன்னு

(02:04):
சொல்றீங்களே. என் மனச தான் நான் கல்லாக
செஞ்சுகிட்டேனு என் தேகமல்லவா கலங்குது குழந்தைய நெனச்சா வயிறு
பகிருங்குதே குடலெல்லாம் ஒரே வலிக்குது நெஞ்ச இறுக்கி புழியது
போல இருக்கே. நான் என்ன செய்வேன் சுவாமி.
விக்ரமன காப்பாத்தி கொடுக்குறேன்.நீங்க வாக்கு குடுத்தீங்களே.

(02:24):
அந்த வாக்கு நிறைவேத்துனீங்களா? என் நிறைவேத்தலன்னு நினைக்கிற
அருள் மொழி நிறைவேத்தி தான் இருக்கேன்.
விக்ரமனோட உயிரை காப்பாத்தி தரேன்னு உனக்கு வாக்கு
கொடுத்தேன். அவனோட உயிர காப்பாத்தி தான்
இருக்கேன். விக்ரமன வீரமகனாக செய்யறதுக்கு
அவரோட தந்தைக்கு வாக்களிச்ச அதையும் நிறைவேத்தி இருக்கேன்.

(02:46):
அம்மா நீ மட்டும் அன்னைக்கு காஞ்சி பல்லவ சக்கரவர்த்தியோட
நீதி சபையில இருந்திருந்தேன்னா உடல் பூரிச்சு போயிருப்ப
பொய்யாமொழி பெருமானோ ஈன்ற பொழுது பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன்
என கேட்ட தாய் அப்படின்னு சொன்னதுஉன் விஷயத்துல மட்டும்
பொய்யாகுமா? சக்ரவர்த்தி எவ்வளவோ நல்ல

(03:07):
வார்த்தை சொன்னார். விக்ரமனுக்கு பல்லவ
சாம்ராஜ்யத்துக்குள்ள அடங்கி கப்பம் கட்டிக்கிட்டு வாழறதா
இருந்தா உன்னோட துரோகத்த மன்னிச்சு.
சோழ நாட்டுக்கு பட்டம் கட்டுறேன்.அப்படின்னு சொன்னாரு.
ஆனா விக்ரமனும் அணு அளவாவது மனம் சலிக்கணுமே மழைய போல அசையமன்
நின்னா. அது மட்டுமா சக்ரவர்த்தியையே தான்

(03:29):
கூட சண்டைக்கு கூப்பிட்டா. நீங்க சுத்த வீரன் என்பது
உண்மைன்னா என் கூட வாட்போர் செய்யவாரும் என்னை ஜெயித்துவிட்டு
பிறகு கப்பம் கேளும் அப்படின்னு சொன்னா தெரியுமா?
அவனோட கண்கள்ல தான் அப்ப எப்படி தீப்பொறி பறந்தது அருள்மொழி அத
பாக்க நான் குடுத்து வச்சிருந்தேன்.

(03:50):
நீ தான் அந்த பாக்கியத்தை செய்யல அப்படின்னு சிவன் அடியார்
சொன்னாரு. ஆவலால விரிஞ்ச கண்கள் ல கண்ணீர்
ததும்ப மேற்கூறின இந்த விவரத்த கேட்டுக்கிட்டு இருந்த அருள்
மொழியோ ஆமாம் சுவாமி நான் பாக்கியமற்றவள் தான் அதுக்கும்
சந்தேகமா பதியை போர்க்களத்துல பலிகொடுத்துட்டு இந்த உயிரை

(04:10):
வச்சுக்கிட்டு இருந்தேன். மகன் தேச பிரஷ்டனாகி கண்காணாத
தேசத்துக்கு போனதுக்கு அப்புறமும்இந்த உயிரை வச்சுக்கிட்டு
இருக்கேன். சுவாமி பல்லவ சக்ரவர்த்தி
உரியோருக்கு வரப்போறாருன்னு சொல்றாங்களே.
அது உண்மையா? அப்படி வந்தா அவரோட கால்ல
விழுந்து என்னையும் விக்ரமன அனுப்பின அதே இடத்துக்கு
அனுப்பிடுங்க. அப்படின்னு கேட்டுக்க போறேன்.

(04:31):
அப்படின்னு அருள்மொழி தேவி சொல்லிக்கிட்டு இருக்கும்போது
என்ன சொன்னா அருள்மொழி அழகுதான் உன் புருஷனோட ஜென்ம சத்ருவோட
கால்ல விழுந்தா கெஞ்சுவ வீர சொர்க்கத்துல இருக்குற பார்த்திப
ராஜா இது அறிஞர் சந்தோஷப்படுவாரா யோசிச்சு பாரு.
ஆமா சுவாமி. அவர் சந்தோஷப்பட மாட்டாரு தான்

(04:51):
நானும் அவரோட சத்ரு கிட்ட பிச்ச கேட்க மாட்டேன்.
ஏதோ ஆத்திரப்பட்டு சொல்லிட்டேன். ஆஹா.
அவர் தான் என்னவெல்லாம் ஆகாச கோட்ட கட்டினார்.
கன்னியாகுமரில இருந்து இமைய பர்வதம் வரைக்கும் புலி கொடி
பறக்கணும்னு ஆசைப்பட்டாரு. அவரோட பிள்ளைக்கு இந்த பெரிய
தேசத்துல இருக்கவும் இடம் இல்லாம போயிடுச்சு.

(05:12):
பார்த்திப மகாராஜா வேற ஒரு மனக்கோட்டையும் கட்டளை அம்மா.
சோழராஜ்யம் கடல்களுக்கு அப்பால் உள்ள தேசத்துலயும் பரவணும்னு அவர்
ஆசைப்படலையா? ரகசிய சித்திர மண்டபத்துல அவர்
எழுதி இருக்கிற சித்திரங்கள கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கோ.
அய்யோ அவருடைய ஆசை இப்படியா நிறைவேறணும்.

(05:32):
விக்ரமன் இன்னைக்கு கடல்களுக்கு அப்பால் உள்ள ராஜ்யங்கள்
பிடிக்கிறதுக்காகவா படம் எடுத்தா போயிருக்கான்.
எந்த காட்டும் மிராண்டி தீவுல கொண்டு போய் அவன
விட்டுருக்காங்களோ காட்டுலயும் மழைலயும் எப்படி அழிஞ்சு
கஷ்டப்படுறானோ, ஏன் என்னை ஏமாத்த பாக்குறீங்க சுவாமி.
உன்ன நான் ஒரு நாளும் ஏமாத்த மாட்டேன்ம்மா உன்ன ஏமாத்தி எனக்கு

(05:53):
என்ன காரியம் ஆகணும். உன் மகனுக்கு ஒரு குறையும் வராது.
அப்டிங்கறது என் நம்பிக்க விக்ரமனுக்கு முன்னாடி யாரும் தேச
பிரஷ்டனாகி காட்டுக்கு போனது இல்லையா?
ராமன் போகலையா? பஞ்ச பாண்டவர்கள் போகலையா?
விக்ரமனும் கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகள்ல அனுபவிக்கிற
கஷ்டங்கள் எல்லாம் அவனோட வீரப்பராக்கிரமங்கள இன்னும்

(06:16):
அதிகமாக வழக்கும். திரும்ப தாய்நாட்டுக்கு அவன்
வரும்போது. அப்படின்னு சிவன் அடியார்
சொல்லிக்கிட்டு இருக்கும்போது. அய்யோ அவன் வர வேண்டாம் சுவாமி வர
வேண்டாம் தாய்நாட்டுல காலடி வச்சாசிரசாக்கினை அப்படின்னு தான்
சக்கரவர்த்தி விதிச்சிருக்காரு. எங்கேயாவது கண்காணாத
தேசத்துலயாவது அவன் உயிர வச்சிக்கிட்டு இருக்கட்டும்.

(06:37):
அதுவே போதும் அப்படினா அருள்மொழி.ஆனா ஆமா அப்படி வராம இருக்க
முடியாது. அருள்மொழி.
என்னைக்காவது ஒரு நாள் அவன் வந்தேதீருவான்.
தாயின் பாசமும் தாய் நாட்டின் பாசமும் அவன கவர்ந்து இழுக்கும்
இந்த ரெண்டு பாசங்களை காட்டிலும் வலிமை பொருந்தின.
இன்னொரு பாசமும் சேர்ந்திருக்கு. உனக்கு அது தெரிய நியாயம் இல்ல

(07:01):
தான் அப்படின்னு சிவன் அடியார் சொல்லி நிறுத்தினர்.
என்ன சொல்றீங்க சுவாமி அப்படின்னுஅருள்மொழி கேட்டா.
ஆமாம்மா. தாயின் அன்பையும் தாய்நாட்டு
பற்றியும் காட்டிலும் பெரியதொரு சக்தியும் அவன திரும்பவும் இந்த
தேசத்துக்கு வரும்படி இழுக்கும். அது ஒரு இளம் பெண்ணின்

(07:23):
கருவிழிகளில் உள்ள காந்த சக்தி தான்.
அம்மா நானு இன்னைக்கு பற்ற அறுத்ததுறவி ஆனாலும் பூர்வாஸ்ரமத்துல
ஸ்ரீ பிரேமையினால ஏற்படுற இன்ப துன்பங்களை அறிஞ்சவன்.
இது என்ன சுவாமி நீங்க சொல்றது எனக்கு புரியலையே.
விக்ரமனுக்கும் ஸ்ரீ பிரேமிக்கும்என்ன சம்பந்தம் அப்படின்னு விய

(07:45):
போட கேட்டா அருள்மொழி. சிவன் அடியாரோ புன்னகை
செஞ்சுக்கிட்டு ஒவ்வொரு. தாயும் மகனை பற்றி இப்படி தான்
வெகு காலம் நினைச்சுக்கிட்டு இருக்கா?
கடைசில நேருக்கு நேர் உண்மைய காணும் போது திடுக்கிடுற நீயாவது
முன்னாடியே தெரிஞ்சுக்கோமா? உன் மகன் விக்ரமன் காஞ்சி நகரோட

(08:08):
வீதியில ஒரு கண்ணி சந்திச்சா. அவன குறுக்கும் நடுக்குமாக
சங்கிலியால பெனச்சு குதிர மேல கூட்டிட்டு போன போது தான் அந்த
சந்திப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலேயே அந்த பொண்ணும்
தன்னோட உள்ளத்த அவனுக்கு பறிகொடுத்துட்டா.
இது நான் கேட்டோம். ஊகித்தும் அறிந்த விஷயம்.

(08:30):
ஆனா நானு நேர்ல ஒரு அதிசயத்த பாத்தேன்.
மாமல்லபுரத்து கடற்கரைல விக்ரமனை ஏத்திக்கிட்டு கப்பல் கிளம்பி
கரையோரமாக போக ஆரம்பிச்ச சமயத்துலஅந்த பெண் காஞ்சியில் இருந்து
ஓடோடியும் வந்து சேர்ந்தா. மறுபடியும் அவங்களோட கண்கள்
சந்திச்சது உள்ளங்கள் பேசிக் கொண்டன.

(08:53):
காதலும் கனிவும் ததும்பிய. அந்த பெண்ணோட விசால நயனங்கள
விக்ரமனால ஒரு நாளும் மறக்க முடியாது ராத்திரி ஆனாலும் பகல்
ஆனாலும் முழிச்சிருக்கிற நிலையானாலும் தூக்கத்துலயும்
கனவுளையும் கூட அந்த பெண்ணோட மதிவதனம் அவன் முன்னாடி
தோன்றிக்கொண்டு தான் இருக்கும். எங்க இருந்து எந்த தொழில்

(09:14):
செஞ்சாலும் எத்தகைய இன்ப துன்பங்களை அனுபவிச்சாலும்
விக்ரமன் அந்த பெண்ண மறக்கவே மாட்டான்.
என்னைக்காவது ஒருநாள் அவள பாக்குறஆசையோட அவன் தாய்நாட்டுக்கு
திரும்பி வந்து தீருவான். அப்படின்னு சொன்னாரு.
இத்தன நேரமும் தகச்சு உட்கார்ந்திருந்த அருள் மொழியோ

(09:34):
அய்யோ எனக்கு மிஞ்சி இருந்த செல்வம் எல்லாம் என் பிள்ளையோட
அன்பு ஒன்னு தான் அதுக்கும் ஆபத்து வந்துடுச்சா அந்த பெண்
யார் சுவாமி அப்படின்னு தீன குரல்ல கேட்டா.
பல்லவ சக்ரவர்த்தியோட மகள் குந்த வீதம் மாது அப்படின்னு சிவன்
அடியார் சொல்லி முடிச்சாரு. ஆஹா என் பதியினோட பரம சத்ருவின்

(09:56):
மகளா சுவாமி என்னமோ செய்கிறதே தலைசுட்டுகிறது அப்படின்னு அருள்மொழி
சொன்ன அடுத்த கணமே தரையில மூர்ச்சையாகி விழுந்தா.
இதுக்கு அப்பறம் என்னாச்சுன்னு அடுத்த கதைல கேக்கலாம்.
சரியா? அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

The Bobby Bones Show

The Bobby Bones Show

Listen to 'The Bobby Bones Show' by downloading the daily full replay.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.